டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மேற்படி காய்ச்சல் பாதிப்பினை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி பூரண ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பினை முழுமையாக ஒழிக்க முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதில், மக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காவண்ணம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். சுற்றுப்புறத்தில் கொசுக்கள் உற்பத்தி செய்திட ஏதுவாக உள்ள டயர்கள், உரல்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள், உபயோகமற்ற பொருட்கள், பேப்பர் கப்கள் போன்ற பொருட்களை உடன் நீர் தேங்காச்செய்யாமல் செய்வதுடன் அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டினை தூய்மையாக வைத்திடல் வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் குடிநீரை சுத்தப்படுத்தி மூடி கொசு புகாதவாறு வைக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் நீர் தேங்கி இருப்பதை உடனுக்குடன் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும்போது உடனிருந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் வாங்கிச் சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு அரம்ப சுகாதார நிலையம் மற்றும் தலைமை அரசுமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்.

மாடிகளில் சின்டெக்ஸ் பயன்படுத்தும் வீடுகளில் தொட்டிகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து நீர் நிரம்பி வெளியேறும் குழாய்களிலும் ஏர் வால்வுகளிலும் கொசுக்கள் உள்ளே புகாதவாறு கொசுவலை துண்டினை கட்டப்படல் வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...