ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக சி.ஐ.டி.யூ சார்பில் காத்திருப்பு போராட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பள்ளி துப்புரவு, டெங்கு பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் என நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீப மாதங்களாக இவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்குவதில்லை. இது சம்மந்தமாக பலகட்டங்களாக நேரிலும் கடிதம் மூலமும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவதும் எவ்வித நடவடிக்கை இல்லததால், இது சம்மந்தமாக ஒப்பந்ததாரர்களிடம் பேசம் பொழுது எங்களுக்கு உரிய காலத்தில் இருந்து எங்களுக்கு பில்லிற்கான தொகை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர். 

எனவே, மேற்கண்ட பணியாளர்களுக்கு, முதன்மை வேலையளிப்பவர் என்ற முறையில் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு இன்று காலை அடையாள வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதியிடம் தங்கள் பிரச்சனையை கூறினார். இதற்கு முறையான நடவடிக்கை எடுத்து நாளைமறுநாளில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...