கோரிக்கை தினத்தையொட்டி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு முடிவின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மினிமைய ஊழியர்களை மெயின் மையத்திற்கு பதவி உயர்வு வழங்கவும், முழுநேர அரசு ஊழியராக்கு வேண்டும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் அனைவருக்கும் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாந்தி தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஸ்டெல்லா கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநிலப் பொறுப்பாளர் பாக்கியம் சிறப்புரை ஆற்றினார். இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மினிமைய ஊழியர்களை மெயின் மையத்திற்கு பதவி உயர்வு வழங்கவும், முழுநேர அரசு ஊழியராக்கு வேண்டும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டம் அனைவருக்கும் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாந்தி தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஸ்டெல்லா கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநிலப் பொறுப்பாளர் பாக்கியம் சிறப்புரை ஆற்றினார். இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.