தண்ணீர் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் சலவை தொழிலாளர்கள் மனு

தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-

தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். 

எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...