தண்ணீர் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கபட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று சலவை தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-
தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம்.
எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இடையர் வீதி கன்னட வன்னார் சந்து பகுதி சலவை தொழில் செய்து வரும் மக்கள் கூறியதாவது :-
தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாடு காரணமாக வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டிக் கொடுக்கபட்ட டோபிகானாவில் 50-ம் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தண்ணீர் கிடைக்க பெறாத காரணத்தால் சலவை தொழில் செய்து வந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளது. தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி தொகை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம்.
எனவே, தாங்கள் பணி செய்து வரும் டோபிகானா அருகே போர்வெல் அமைத்து தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலை சீராகும் வரை தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.