கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக கோவையில் புரட்சிகர இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்- கைது

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் இரு நாட்களுக்கு முன்பு எண்ணெய் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து அதில் தீபற்றியும் எரியத்துவங்கியது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் உடனடியாக கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி-யின் குழாய்களை அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் மக்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து பொதுமக்களின் மீது காவல்துறையினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கண்மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பணத்திற்காகவும், பதவிக்காகவும் மத்திய அரசிடம் பணிந்து செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மத்திய அரசு மக்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும். எதை பயன்படுத்த வேண்டும் என அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.



கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழக அரசே. கதிராமங்கலத்தில் போராடிய ஜெயராமன் போன்றோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்" என்றார்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...