கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொது சுகாதாரத்துறையின் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-

மழை காலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுதல் மற்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு முந்தைய ஆண்டு மழைகாலங்களில் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டது போலவே, இனி வரும் காலங்களிலும் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வே;ண்டும். நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். மேலும் குடியிறுப்பவர்களுக்கு தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமதிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளித்தல் வேண்டும்.
டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்துதல் வேண்டும். பொது மக்களிடத்தில் சுகாதாரக் கல்வி அளித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மேலும், டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டால் உடனடியாக துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், உயர் சிகிச்சை வழங்கிட ஏதுவாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கோ, அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே பரிந்துரைத்திட வேண்டும். மழைகாலங்களில் மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மிகுந்த சிரத்தையுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
பொதுமக்களும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் யாருக்கேனும் தொடர் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறி ஏற்படுமாயின் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கோ, அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கோ தகவல் அளித்தல் வேண்டும். மேலும் வீட்டிற்கு ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மழை காலங்களில் சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுதல் மற்றும் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு முந்தைய ஆண்டு மழைகாலங்களில் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டது போலவே, இனி வரும் காலங்களிலும் அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நகர, மற்றும் கிராமப்பகுதிகளில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வே;ண்டும். நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். மேலும் குடியிறுப்பவர்களுக்கு தண்ணீரை சுகாதாரமாக சேமிக்கவும், சுகாதார முறைப்படி வீடுகளை பராமதிக்கவும் அனைத்து வீடுகளிலும் கொள்கலன்களில் அபேட் மருந்துகள் தெளித்தல் வேண்டும்.
டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ முகாம் தொடர்ந்து நடத்துதல் வேண்டும். பொது மக்களிடத்தில் சுகாதாரக் கல்வி அளித்தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மேலும், டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டால் உடனடியாக துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். மேலும், உயர் சிகிச்சை வழங்கிட ஏதுவாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கோ, அல்லது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே பரிந்துரைத்திட வேண்டும். மழைகாலங்களில் மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மிகுந்த சிரத்தையுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
பொதுமக்களும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், சுற்றுப்புறத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் யாருக்கேனும் தொடர் காய்ச்சல் அல்லது டெங்கு அறிகுறி ஏற்படுமாயின் ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கோ, அல்லது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கோ தகவல் அளித்தல் வேண்டும். மேலும் வீட்டிற்கு ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) பத்மாவதி, (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.