தி வெஸ்டெர்ன் காட்ஸ் பள்ளியின் சார்பில் "வன மஷோத்சவ்" மரம் நடும் விழா கொண்டாட்டம்

தி வெஸ்டெர்ன் காட்ஸ் சர்வதேச பள்ளியின் இயற்கை மன்றத்தின் சார்பில் "வன மஹோத்சவ்" எனப்படும் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 8ம் வகுப்பு மாணவி சம்யுக்தா எஸ்.சாம்ராஜ் வரவேற்புரையாற்றினார்.



கோவை பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் சுஜாதா, ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். காணோலி காட்சி மூலம் மரங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். 

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இயற்கை மன்ற உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தில் 60 மரக்கன்றுகளை நட்டனர். மேலும், இயற்கை காய்கறி தோட்டத்தில் காய்கறி விதைகளை விதைத்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, இயற்கை மன்ற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த மரக்கன்றுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். விருந்தினர் முன்னிலையில் மரக்கன்றுகளை வைத்து பராமரிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

நிறைவாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் 8ம் வகுப்பு மாணவி மெலோடிகா விஜயன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...