கோவை மதுக்கரை அருகே உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றிதிரிந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


கோவை மதுக்கரையொட்டிய பகுதியில் தொடர்ச்சியாக யானையின் நடமாட்டம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் வளாகத்தில் தள்ளாடிய நிலையில் சுற்றிய சிறுத்தையை கண்ட பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்கானித்த கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே சிறுத்தை மயங்கி விழுந்தது.



இதனை அடுத்து, வனத்துறையினர் தண்ணீரில் நனைத்த துணியை கொண்டு சிறுத்தையை சுற்றி வனத்துறையினரின் வாகனம் மூலம் மதுக்கரை அடுத்துள்ள இந்திய கடற்படை வீரார்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.வனத்துறை மருத்துவர்களின் சிகிச்சைக்காக காத்திருந்த நிலையிலேயே சிறுத்தை உயிர் இழந்தது. 

நகரத்தையொட்டிய பகுதியான மதுக்கரையில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளதும் அது மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் அங்கு சென்று வனப்பாதுகாவலர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர் மனோகரன் சிறுத்தை இறந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொண்டு அங்கேயே புதைக்கப்பட்டது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...