கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகள் அறிமுகம்

கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு நேற்றைய முன்தினம் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையத்தில் முதல் முறையாக செயலி (App) மூலமாக நான்கு சக்கர வாகன சேவைகளை ரயில் பயணிகளுக்கு வழங்கும் வகையில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இச்சேவை மூலம் ஜூலை 1ம் தேதி முதல் பயணிகள் நான்கு சக்கர வாகன சேவையை கோவை ரயில் நிலையத்தில் உள்ள கியாஸ்க்குகளில் இருந்தே பதிவு செய்து கொள்ளலாம்.



பயணிகளுக்கு சேவை வழங்க தெற்கு ரயில்வே தகவல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அதற்கு உரிய முன்னோடி திட்டமாக கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலமாக வாகன சேவைகள் அளிக்க இத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்னனுபவமிக்க OLA, UBER, FAST TRACK ஆகியோருடன் இணைந்து இந்த சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலி மூலமாக வாகன சேவைக்குரிய சுமார் 20 கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக கோவை ரயில்நிலைய சந்திப்பின் மைய நுழைவு வாயிலில் சுமார் 339 சதுர மீட்டர் பகுதியை ரயில்வேத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.



இந்த சேவையை குறித்து, UBER தெற்கு கார் நிறுவனத்தின் பொது மேலாளர் கிரிஸ்டின் ஃப்ரீஸ் கூறுகையில்; கோவையில் உபரின் இரண்டு ஆண்டுகள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தெற்கு ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஏற்கனவே, உள்ள பொது மக்களுக்கான போக்குவரத்துக்கு கட்டமைப்பு வசதிகளுடன், முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பில் உள்ள இடைவெளியை நிறைவு செய்வதன் மூலம், பணிகள் அணுக்கத்தை எளிதாக்குகிறோம்.

மேலும், ராயில்வேயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள தமிழகத்தில் முதல் நகரம் கோவையாகும். நகரத்திற்குள் பொது மக்கள் எளிதில் பயணிக்க உதவும் வகையில் எங்களது முனைவுகளை மேலும் வலுப்படுத்த உறுதியாக உள்ளோம். ஸ்மார்ட் ஃபோன் அல்லது இணைய வசதி இல்லாவிட்டாலும், எந்தக் கவலையும் இன்றிப் பயணிகள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல எங்கள் பிரதிநிதிகள் உதவுவார்கள்" என்றார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...