குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதால் அரசு உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அரசு மருத்துவ சிகிச்சை வழங்க குழந்தைகளின் தாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



கோவை அடுத்த பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியைச் சார்ந்த ஜீவிதா என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார். அம்மனுவில், தனக்கு 8 வயது பெண் குழந்தையும், 6 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த இரு குழந்தைகளும் பிறவியில் இருந்தே உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தனது மகன் பள்ளிக்கு செல்வதில்லை. இரண்டு குழந்தைகளின் உடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தங்களுக்கு வசதி இல்லை" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து மருத்துவர்கள் சொல்ல மறுக்கின்றனர். குழந்தைகளின் பிரச்சனையை கண்டறிந்து அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜீவிதா கூறுகையில், இரண்டு குழந்தைகளும் தினமும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சிறுவன் உடல் பருமனால் நடக்க முடியாமல் வீட்டிலேயே இருக்கிறான். இரண்டு குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை பெற அரசு உதவி செய்ய வேண்டும்' என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...