கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள நீர்த்தேக்கக் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில் கட்ட முயற்சிப்பதாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.