கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலைமறியல்

கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்குவதில் அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி இன்று பெற்றோர்கள், மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு உள்ளிட்டவற்றால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழக பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்விகளானது மாறுபட்டு மருத்துவ படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மீதமுள்ளவர்களை நிர்வாகத்தினர் அலைக்கழித்துள்ளனர். 



இதனைத்தொடர்ந்து, இன்று மருத்துவக் கல்லூரியில் சிலருக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு பிறரை நாளை வரும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், மாணவர்களும் அவினாசி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.



முன்னதாக, இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறுகையில், ஏற்கனவே மத்திய அரசின் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்கள் பெரிதும் மனவுளைச்சல் அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விண்ணப்பங்கள் வழங்குவதில் முறையாக செயல்படுவதில்லை. இவ்வாறாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...