மேம்படுத்தப்பட்ட தரத்துடன் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் சக்கர நாற்காளி இருக்கை

உடல் ஊனமுற்றோர் வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்டதே சக்கர நாற்காளி வாகனம். இவை 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதனைத்தொடர்ந்து, சில மாறுபட்ட அம்சங்களுடன் 20ம் நூற்றாண்டில் சக்கர நாற்காளிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சக்கர நாற்காளி இருக்கை உடல் ஊனமுற்றோருக்கும், வயது முதிர்ந்தோருக்கும் நல்ல பயனை அளித்தது. இவை ரிமோர்ட் கன்ரோல் மூலம் செயல்படக்கூடியதாக மேம்படுத்தப்பட்டன. இருப்பினும் இதில் பொருத்தப்பட்ட கன்வன்சனல் மோட்டாரைசுடு மோட்டார்கள் மிகவும் கடினமானதாகவும், ஊனமுற்றோர்களுக்கு சிரமங்களையும் ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

இந்நிலையில், கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் மிக குறைந்த விலையில், அதிகத் தரத்துடன் சக்கர நாற்காளி உருவாக்கும் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஜாய் ஸ்டிக், புளூடூத், கைபேசியின் மூலம் இயக்கும் தன்மை உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சிந்தனையை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் பையோமெட்ரிக் இன்ஜினியரிங் துறை வழங்கியுள்ளது. இதனை செயல்படுத்துவதற்கான நிதி உதவியினை சையின்ஸ் அன்டு டெக்னாலஜி துறை வழங்குவதற்கான திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது மூன்று வருடத்திற்கு சேர்த்து 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பிஎஸ்ஜி மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட உள்ள இந்த சக்கர நாற்காளி ஒரு முறை மின்னூட்டம் செய்யப்பட்டால் தொடர்ந்து 12 மணி நேரம் இயங்கும் தன்மையுடையது.

டாக்டர்.வி.ராமமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி.ஜி மருத்துவமனைகளின் ஏ.பார்த்திபன் ஆகியோர் கூறுகையில், இந்த சக்கர நாற்காளி கண்டுபிடிப்பானது ஊனமுற்றதால் முடங்கியுள்ள நபர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். பிறறின் உதவியின்றி ஜாய் ஸ்டிக், புளூடூத் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தாங்களே செயல்பட்டுக் கொள்ள முடியும். ஊனமுற்றோர்களின் எதிர்பார்ப்பை இது எளிமையாக்கும்' என்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...