முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான இரு குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மறுவேலைவாய்ப்பு அடிப்படையில் குடிமைப்பணியில் வேலைவாய்ப்பு பெற்று குடிமைப் பணிக்கான ஓய்வூதியம் பெற்று உயிர்நீத்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவிரர்களின் கைம்பெண்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு இராணுவ குடும்ப ஓய்வூதியத்துடன் குடிமைப்பணியில் பணியாற்றியமைக்கான குடும்ப ஓய்வூதியமும் வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டள்ளது.

2013 ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு, குடிமைப்பணியில் மறுவேலைவாய்ப்பு பெற்று பணிபுரிந்து ஓய்வுபெற்ற பின்பு ஓய்வூதியம் பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு இது பொருந்தும்.

எனவே, கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த குடிமைப்பணியில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்கள் இவ்வரசாணையின்படி முன்னாள் படைவீரர்கள் பணியாற்றிய குடிமைப்பணி துறையினை அணுகி குடும்ப ஓய்வூதியம் குறித்தான கருத்துருவினை மாநில கணக்காயருக்கு பரிந்துரை செய்து பயனடையலாம்.

இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், 0422- 2214107 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது நேரில் தொடர்புகொண்டு பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...