மறைந்த பத்திரிகையாளர் அவனாசிலிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பத்திரிகையாளர்கள்

கடந்த 1975 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அவினாசியில் ஐயாசாமி, அம்புஜம் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அவனாசிலிங்கம். இவர், சன் தொலைக்காட்சியில் 20 வருடங்களாக பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு உயிரிழந்தார்.



நேர்மையான பத்திரிகையாளராகவும், மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வாயிலாக தீர்த்து வைத்த சமூக சேவகராகவும் வாழ்ந்து மறைந்த அவனாசிலிங்கத்தின் நினைவேந்தலை அனுசரிக்கும் விதமாக அவர் மறைந்த நாளன்று பத்திரிகையாளர்கள் நினைவேந்தல் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று அவனாசிலிங்கம் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊடகத்துறை வாயிலாக அவனாசிலிங்கம் செய்த சேவைகள் குறித்து உரையாற்றினர். 

நெகிழ்ச்சியான பத்திரிகையாளராய் மட்டுமின்றி நல்ல மனிதராக வாழ்ந்த அவனாசிலிங்கத்துடன் கழித்த தருணங்களை சக பத்திரிகையாளர்கள் கண்ணீர்மல்க வெளிப்படுத்தினர்.



நிகழ்வின் முடிவில், பத்திரிகையாகர்கள் சார்பில் மலைவாழ் மக்கள், மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...