புதிதாய் பிறந்த குழந்தைக்கு அரிய வகை சிக்கல் - ஆபரேஷனில் சரி செய்தது ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை

லட்சுமி, சேர்வை தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரிப்பில் இரண்டு கிலோ எடையில், இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தைக்கு அரிய வகை சிக்கல் இருப்பது கண்றியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தேவபிரசாத், பாதிக்கப்பட்ட குழந்தைகக்கு இருதய துடிப்பு வரைபடமும், சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, இருதயத்தின் நிலை மோசமாக இருந்தது. ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளம், இடது புறமாக திரும்பி, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தத்தை கொடுத்து வந்தது. இது தான் வழக்கமாக இருக்கும் முறை.



ஆனால், இந்த குழந்தைக்கு ரத்த நாளக்குழாய் ஒன்றுக்கு பதிலாக, இரட்டையாக ஒட்டியிருந்தது. இது மிகவும் அரிதான ஒன்று. இருதய குறையுடன் பிறக்கும் குழந்தைகளிலும் இந்த வகைக்கு 0.5 -1% தான் வாய்ப்பு உள்ளது. பல லட்சத்தில் ஒன்று மட்டுமே இவ்வாறு அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த குழந்தைக்கு இடது ரத்த நாளம் மட்டுமின்றி, வலது புறத்திலிருந்தும் ஒரு ரத்த நாளம் உருவாகி வட்ட வடிவத்தில் இருந்தது. இது, முச்சு குழலுக்கும், இரப்பை குழலுக்கும் இடையே அழுத்திக் கொண்டிருந்தது. இந்த அழுத்தம் காரணமாக குழந்தைக்கு முச்சு திணறலும், உணவுக்குழாயில் உணவு செல்ல வழியின்றியும் தவித்தது. குழந்தையின் எடை குறைந்து வந்தது.

தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவில் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் சதாசிவம், டாக்டர் சுஜித், டாக்டர் ரீனுாஸ் ஆகியோர் டாக்டர் தியாகராஜ முர்த்தியுடன் இணைந்து, அறுவை சிகிச்சை செய்தனர்.

சிறிய குழந்தையாக இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப்பின்னும் சிக்கல்கள் நீடிக்கும். இந்த கவனிப்பை சிசுவியில் நிபுணர் டாக்டர் சித்தார்த்த புத்தவராஜூ மற்றும் டாக்டர் சுஜா மரியம் ஆகியோர் சரியான முறையில் மேற்கொண்டனர். ஒரு வாரத்தில் இவர்கள் நலமுடன் வீடு திரும்பினர்.

தற்போது, நலமடைந்த குழந்தையின் எடை அதிகரிக்க துவங்கியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...