பிரதமர் திட்டத்தில் வீடு கட்டித்தருவதாக கோவையில் பாஜக-வினர் மோசடி- அனைத்துக் கட்சியினர் குற்றச்சாட்டு

பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருகின்றோம் எனக் கூறி கோவையில் அப்பாவி மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்யும் பாஜக-வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என கோவையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தில் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.



கூட்டத்தில் பாரத பிரமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி தருவதாகக் கூறி பாஜக-வினர் விண்ணப்பம் விநியோகம் செய்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கு.இராமகிருட்டிணன், பாஜக-வினர் வார்டு வாரியாக அலுவலகம் திறந்து விண்ணப்பங்களை விற்பனை செய்து வருகின்றனர். 



இது போன்று பொது மக்கள் விண்ணப்பிக்க பணம் தரக்கூடாது. இந்த விண்ணப்பங்களை விற்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் பாஜக-வினர் விண்ணப்பங்களை வார்டு வாரியாக விற்கும் சட்டவிரோதமான செயலை செய்து வருகின்றனர். 

மாநில அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் செய்ய வேண்டிய பணியை கோவை மாவட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு பாஜக-வினர் செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 27-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளது. அப்பாவி மக்களிடம் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பணம் பெற்று நடத்தப்படும் இந்த மோசடியை தடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், பாஜக-வினர் விண்ணப்பம் விற்பனை செய்யும் இடங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" என கு.இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...