பள்ளி மாணவர்கள் தேர்தல் முறையை தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல்

வாக்களிக்கும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளியில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் டிஜிட்டல் முறையில் வாக்களித்தனர். 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



இந்த நிலையில், பள்ளி  மாணவ, மாணவியர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 649 மாணவ மாணவிகள், 79 ஆசிரியர்கள், 5 நிர்வாகிகள் உள்ள இப்பள்ளியில் மாணவர் தலைவர், துணை தலைவர், கலை துறை செயலர் மற்றும் விளையாட்டு துறை செயலர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் ஐ பேட் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலின் போது வாக்களிக்கும் முறை பின்பற்றப்பட்டது. 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது மாணவ மாணவிகளின் கை விரல்களில் மை வைக்கப்பட்டு வாக்காளர் அடையாள சீட்டு சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்வமுடன் வாக்களித்த மாணவ மாணவியர் 18 வயது நிரம்பியவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள் என்றுள்ள சூழலில் தாங்கள் வாக்களித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...