கோவை விமான நிலையத்திற்கும் KMCH மருத்துவமனைக்கும் இடையே நடைபெற்ற அவசர விபத்து சிகிச்சை ஒத்திகை பயிற்சி.

மாநில நிர்வாகம், KMCH மருத்துவமனை, காவல் துறை, தீயணைப்பு துறை மற்றும் விமான இயக்கங்களுடன் சம்மந்தப்பட்ட மற்ற துறைகளும் இணைந்து கடந்த அவசர உதவி ஒத்திகை பயிற்சியை கோவை சர்வதேச விமான நிலையத்தில நடத்தின.

விமானத்துறை டைரக்டர் ஜெனரல் விதிகளின்படி உரிமம் பெற்ற அனைத்து விமான நிலையங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு அளவிலான அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தவேண்டும். ஒரு விமானத்துக்கு விபத்து நேர்ந்தால் அதனால் ஏற்படும் அவசர நிலையை எதிர்கொள்ள ஊழியர்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொள்ள தயாராக இருப்பதின் ஒரு பகுதியே இந்த ஒத்திகை பயிற்சி.

அவசர காலத்தில் ஒரு விமானத்தை தரை இறக்குவது போன்ற சூழ் நிலையை உருவாக்க விமான நிலைய ஆணையத்தால் வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. இந்த ஒத்திகை பயிற்சியானது அவசர கால நடவடிக்கை குழுவின் திறமையை பரிசோதிக்க KMCH மருத்துவமனையும் கோவை சர்வதேச விமான நிலையமும் சேர்ந்து நடத்தியது. போலியான அவசர நிலையை உருவாக்கி அதை எப்படி கையாள வேண்டும் (அதாவது Mayday call என்று விமான நிலையத்திலும் Disaster Code Yellow call என்று மருத்துவமனைக்கும்) என்பதற்கு ஒரு திட்டம் தயாரித்து அதன்படி நடத்தப்பட்ட அந்த ஒத்திகை பயிற்சியில் 75 மாணவ மாணவியர்கள் விபத்தில் சிக்கியது போலவும், விமான இயக்க குழுவின் உறுப்பினர்கள், தீயணைப்பு துறையினர், KMCH மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் என 200-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உதவிக்கு அனுப்புவது போலவும் நடித்து அவர்களுடைய திறமையை நிருபித்தனர்.

ஒரு விமானம் நொறுங்கி விழுந்த தகவல் -அதாவது Mayday Call கிடைத்தவுடன் இரண்டு நிமிடங்களில் தீயணைப்பு வண்டிகள், 10 ஆம்புலன்ஸ் வண்டிகள் ஒன்றின் பின் ஒன்றாக விபத்து நடந்த இடத்தை விரைந்து சென்றடைந்தனர். காயம் அடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்வது போல் நிஜமாக நம்பும்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டது.

காயம் அடைந்த பயணிகள் மூன்று பிரிவினராக வகைப்படுத்தப்பட்டனர். தலையில் படுகாயம், ரத்தநாளம் அறுபடுதல், கை/கால் முறிவு மற்றும் தீக்காயம் 40% -இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை ஆகவே KMCH மருத்துவமனை மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் காயம் அடைந்த பயணிகளை 10 நிமிடத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது வகையில் பெரும் எலும்பு முறிவுகள், தீக்காயங்கள்( 20-30%) கொண்ட அந்த பயணிகளை பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சாதாரண காயம் மற்றும் சிராய்ப்பு ஏற்பட்ட மூன்றாவது பிரிவினருக்கு விமான நிலையத்தில் உள்ள முதலுதவி மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. 

இது குறித்து, கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குனர் மஹாலிங்கம் கூறுகையில்;

உண்மையிலேயே இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டால் நாங்கள் எவ்வாறு செயல்படுவோம், எந்த அளவுக்கு தயாராக இருப்போம் என்பதை தெரிந்து கொள்ளவே அந்த முழு அளவு அவசர நிலை ஒத்திகை பயிற்சியை நடத்தினோம். விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்களுக்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் உலக தரத்துக்கு இணையாக எங்கள் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நாங்கள் இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார். 

இந்த ஒத்திகை பயிற்சியில் Spicejet ஏர்வேஸ், சுங்கத்துறையினர், குடியேற்ற துறையினர் (immigration), கோவை காவல் துறை, தீயணைப்பு துறை, KMCH மருத்துவமனை மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர். இது போன்ற ஒத்திகை பயிற்சியில் எங்கள் ஊழியர்கள்களுக்கு தங்கள் திறமையையும் தொழில்நுட்ப யுக்திகளையும் மற்றும் உணர்வுகளை சமன்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்துள்ளது என்று KMCH மருத்துவமனையின் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி கூறினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...