ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் சார்பில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் இன்டர்னல் புகார் அமைப்பின் சார்பில் பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு குறித்து விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கே.வி.சுரேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கவிதா ராஜகோபால் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "பெண்களின் முன்னேற்றத்தினைப் பொருத்தே சமூகத்தின் முன்னேற்றமும் அளவிடப்படுகின்றன" என்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நினைவுகூர்த்து உரையாற்றினார். 

தொடர்ந்து, பணியிடத்தில் பெண்களின் மீதான பாலியல் வன்புணர்வு குறித்தும், அதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு உரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இன்டர்னல் புகார் அமைப்பின் (ஐசிசி) ரேனு தாமஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். ஐசிசி உறுப்பினர் மரியா யேசுராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நிறைவாக ஏ.விஜயசித்ரா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை ஐசிசி உறுப்பினர் பி.எஸ்.சாந்தினி ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...