கொலை வழக்கு சாட்சிகளை வழக்கறிஞர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த அம்மாசை (43) என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாசை கொலை வழக்கில் முறையான நீதி வேண்டி சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆதிகணேசன் என்பவர் 'அம்மாசை கொலை- நீதிக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பு தொடங்கினார்.



இவ்வழக்கு விசாரணை நேற்று முன் தினம் கோவை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சாட்சியளிக்க சென்ற ஆதிகணேசனுக்கு வழக்கறிஞர் ராஜவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இது குறித்து ஆதிகணேசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், அம்மாசை கொலைவழக்கு சாட்சியங்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ராஜவேல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிகணேசன் அம்மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...