சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை- கோவையில் முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாவட்டம் மேட்டூரில் நிதி நிறுவனம் நடத்தி 3.65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை தலைமையிடமாகக் கொண்டு மேட்டூர் காவேரி பைனான்ஸ், அன்னை காவேரி பைனான்ஸ், ஸ்ரீ காவேரி பைனான்ஸ் என்ற  மூன்று நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. மேட்டூரை சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார், கனகராஜ் ஆகியோர் தங்களது உறவினர்களை இயக்குனர்களாக இணைத்துக்கொண்டு இந்த நிதிநிறுவனங்களை நடத்தி வந்தனர். 

இதனிடையே, கடந்த 2005 முதல் 2008 ஆம் ஆண்டு வரை அதிக வட்டி தருவதாகக் கூறி 200-க்கும் மேற்பட்டோரிடம் 3.65 கோடி ரூபாய் இந்த நிதி நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மணி என்பவர் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களின் மீதும், 24 இயக்குனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011 முதல் கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே ரங்கசாமி என்ற இயக்குனர் உயிரிழத்தார். 

இந்நிலையில் திங்களன்று (ஜூன் 19) இந்த வழக்கில் முதலீட்டாளர் பாதுகாப்பு நீதிமன்ற நீதிபதி பாபு தீர்ப்பு வழங்கினார். இதில் 23 நிதி நிறுவன இயக்குனர்களுக்கும் தலா 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தார். மேலும், 23 இயக்குனர்களுக்கும், 3 நிதி நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரு கோடியே 44 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பினை வழங்கினார். மேலும், அபராதத் தொகையினை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கவும் தனது தீர்ப்பில் நீதிபதி பாபு உத்திரவிட்டார்.

இதனையடுத்து 23 நிதி நிறுவன இயக்குனர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 23 பேரில் பெரும்பாலான  இயக்குனர்கள் 60 வயதை கடந்த மூத்த குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தீர்ப்பு, மோசடியில் ஈடுபடும் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு பாடமாக அமையும் என அரசு வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...