ஜிஎஸ்டி அறிவிப்பால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.பி. டி.கே.ரங்கராஜன் பேட்டி

ஜிஎஸ்டி அறிவிப்பால் வர்த்தகர்கள், வியாபாரிகள், கைத் தறி விசைத்தறி தொழில்கள், பஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜிஎஸ்டி முழுமையாக அமலாக்கப்பட்ட பின்னர் பாதிப்பு இன்னும் அதிகமாகும் எனவும் விலைவாசி உயரும் என சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கோவையில் பேட்டியளித்துள்ளார். 

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரத்தை தூண்டும் முயற்சியில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபடுகின்றன. 

இச்சம்பவத்தை கண்டித்து உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்ட திமுக, திராவிட கழகம் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களுக்கும் நன்றிகள். முக்கிய பிரச்சனைகளில் அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். கோவை நகரை பொறுத்தவரை காவல்துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக-விற்கு எதிரான கட்சி சிபிஎம் என்பதை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா அடையாளப்படுத்தி இருக்கின்றார். கேரளாவும், திரிபுராவும் அடுத்த இலக்கு என பாஜக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதே பாஜக தான்.

ஜிஎஸ்டி-யால் வர்த்தகர்கள், வியாபாரிகள், கைத்தறி, விசைத்தறி தொழில்கள், பஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பின்னர் பாதிப்பு இன்னும் அதிகமாகும், விலைவாசியும் உயரும். இதற்கு எதிரான போராட்டங்களில் மக்களுடன் இணைந்து சிபிஎம் போராட்டம் நடத்தும். தமிழகத்தில் அரசு நடைபெறுகின்றதா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிகள் இல்லை என்ற வருத்தம் இப்போது பலருக்கு ஏற்பட்டு உள்ளது. 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எது போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது என்பதை பொறுத்து இருந்து பார்கலாம். ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும்" என்றார்.

இதைத்தொடர்ந்து, திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் பெண்ணை தாக்கிய ஏ.டி.எஸ்-பிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு, விசாரணைக்கும் பதவி உயர்விற்கும் தொடர்பு இல்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது. விசாரணை முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

மதுக்கடைக்கு எதிராக சாமளாபுரம் மக்கள் நடத்தும் போராட்டம் வரவேற்கத்தக்கது. தங்கள் கட்சி அதை வரவேற்கிறது. கேரளா, கோவா, பாண்டிச்சேரி மாநிலங்களில் வருவாய் என்பது மதுவால் மட்டுமே உள்ளது. கேரளாவில் மது விற்பனை குறைத்ததால் வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனதுடன் வருவாயும் குறைந்து போனது. அதன் காரணமாகவே மீண்டும் கேரளாவில் மதுபான விற்பனை துவங்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து, மது விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு, கேரளத்தில் ஒரு நிலைப்பாடு என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, இந்தியா ஒரு நாடல்ல. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவித தேவை இருக்கிறது. தமிழகம், கேரளம் என்பதை மட்டும் எடுத்து பேசுவது சரியல்ல. கேரள அரசின் மதுக்கொள்கை முடிவுகளை பத்திரிகைகள் பாராட்டுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...