துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் நலச்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சியும் வர்தான் இன்ப்ராஸ்டக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் எஸ்.ஆர்.பி அம்மணியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமில் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கண், பல், இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு மற்றும் ECG, Echo போன்ற இருதய சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் 650 ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 112 நபர்களுக்கு கண் சம்பந்தமான நோயும், 246 நபர்களுக்கு பல் சம்பந்தமான பிரச்சனைகளும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை சம்பந்தமான பரிசோதனையில் 60 நபர்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ECG மற்றும் Echo எடுக்கப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற மண்டலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உபகரணங்கள் உபயோகப்படுத்துவது குறித்தும், புகை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவை தவிர்ப்பது குறித்தும் துப்புரவு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ராமைய்யா, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...