உணவு தொழில்புரிவோர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் பதிவு செய்வது கட்டாயம்- கோவை மாவட்ட ஆட்சியர்

உணவு தொழில்புரிவோர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரிடமோ, அல்லது  மாவட்ட நியமண அலுவலரிடமோ, அனைவரும் உரிமம் அல்லது பதிவு செய்து கொள்வது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அனைவருக்கும் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த 05.08.2011 முதல் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 அமலில் உள்ளது உணவு வியாபாரிகளுக்கு 05.08.2011 முதல் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. ஆகையால் தற்சமயம் உணவு வியாபாரிகள் அவர்களது விற்று கொள்முதல் தொகைக்கேற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி உரிமம் அல்லது பதிவு பெற வேண்டிய உணவு உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்க்கான உணவு எண்ணெய், பேக்கரி, இனிப்பு, பனை வெல்லம், குளிர்பானங்கள் மற்றும் ஜஸ்கிரீம்,  பலகாரங்கள், மிட்டாய், முறுக்கு, சிப்ஸ், சோடா கம்பெனிகள், பலசரக்கு கடைகள், அரிசி ஆலைகள், மசால் அரவை நிலையங்கள், உணவு சேமிப்பு கிடங்குகள், மறு பொட்டலமிடுபவர்கள், பால் மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் குளிரூட்டும் நிலையங்கள், பால் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள், பால் வியாபாரிகள், உணவுப் போக்குவரத்துக்கு வாகனங்கள் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தனியார் மற்றும் அரசு விடுதிகள், தெருக்களில் கூவி உணவு பொருள்கள் விற்பனை செய்யும் நடை மற்றும் சைக்கிள் வியாபாரிகள், கரும்பு சாறு பிழிபவர், காய்கறி, பழங்கள் விற்பவர்கள், பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள், விசேஷ நிகழ்வுகளுக்கு சமையல் சேவை செய்பவர்கள், குடிநீர் வாகனங்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள்,  கல்லூரி மற்றும் பள்ளி கேன்டீன்கள், விடுதிகள் உப்பு விற்பனையாளர்கள், கோழி, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், நியாய விலை கடைகள், அன்னதானம் வழங்கும் கோவில்கள் தேவாலயங்கள் பள்ளி வாசல்கள் என இலவசமாகவோ அல்லது பாதி விலையிலோ பொது மக்களுக்கு வழங்கும் வியாபாரிகளும் இத்துடன் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உட்பட அனைவரும் தங்களை மற்றும் தங்கள் நிறுவனம் மற்றும் வாகன (லாரி, வேன் போன்ற) விபரங்களை தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரிடமோ அல்லது மாவட்ட நியமன அலுவலரிடமோ பதிவு அல்லது உரிமம் பெற தொடர்பு கொள்ளலாம்.

அபராதம் மற்றும் தண்டணை இன்றி உடனடியாக பதிவு அல்லது உரிமம் பெற வேண்டியது ஒவ்வொரு உணவு வியாபாரியின் கடமை மற்றும் கட்டாயமாகும்.

வருடத்திற்கு பன்னிரண்டு லட்சத்திற்குட்பட்டு விற்று முதல் செய்பவர்கள் (வருடத்திற்கு ரூபாய் நூறு மட்டும் செலுத்தி சீட்டு  (சலான்) மூலம் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்தலாம். www.foodlicencing.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது புகைப்படம், அடையாள அட்டை (அதாவது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்று) மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் இதுவரையிலும் 204 கலப்பட உணவு பொருட்கள் அதாவது பாதுகாப்பற்ற தரக்குறைவான மற்றும் தப்புகுறியிடு உள்ள உணவுப் பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதத்தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூபாய் 16,60,500 அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் நுகர்வோர்களுக்கு உணவு விற்பனையாளர்களும் மாணவ மாணவிகளும் தங்களது உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் எண் 94440 42322 வாயிலாக தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக உணவுப் பாதுகாப்பு துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரி செய்யப்படுகின்றது" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...