குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதைக் கண்டித்தும், அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்தும் சுக்கரவார்பேட்டை பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட்டனர்.
கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீருடன், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், கழிவுநீர் கலந்து வரும் தண்ணீரை குடிக்க நேரிடும் சூழலால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேலும், 2000-க்கும் அதிகமான பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
முன்னதாக, சுக்கரவார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து அதை எடுத்து வந்து, முறையாக குடிநீர் வழங்கவும், குடிநீர் பிரச்சனையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.