உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி


கோவை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு மையம் சார்பில் இன்று (ஜூன் 15) இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ம் தேதி இரத்த கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 14) கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 116 பேர் இரத்த தானம் செய்தனர். இதுபோன்று பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி தங்கள் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இரத்த தானம் செய்ய இன்று பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் விதமாக ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்ய  வேண்டும், இரத்ததானத்தின் அவசியம் போன்றவையும், இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்! பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு! பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு! என்ற இரத்த தானம் குறித்த விளம்பர பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இரத்த தானம் செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலம் மேம்படுவதற்கும் உதவும். இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்டுவதற்குச் சமம். தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு, மேலும் ஹிமோகுளோபின் அளவினை கட்டுபடுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்ததானம் பயன்படுகிறது. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்ற விழிப்புணர்வு பேரணியானது, இரயில் நிலையம் வழியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பி.ஜி.பானுமதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பானுமதி, கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், குடும்ப நல துணை இயக்குநர் கிருஷ்ணா, இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் மங்கையர்கரசி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேரலாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...