காவல்துறையினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன், மனைவி புகார்

புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பட்டான், இவரது மனைவி கமலா. இவர்களுக்கு தங்கராஜ், செந்தில்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தங்கராஜ்-க்கும் ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே, தங்கராஜ்-க்கும், அவருடன் பணியாற்றி வந்த கோகிலா என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் மாயமாகிய நிலையில், தங்கராஜை தேடிவரும் அன்னூர் போலீசார் பட்டானையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாக தாக்குவதாக குற்றம்சாட்டி இன்று கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 



இது குறித்து பட்டான் கூறியதாவது:- எனது மகன் மாயமானது முதல் தினமும் நள்ளிரவில் போலீசார் எங்கள் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் என்னையும், எனது இளைய மகன் செந்தில்குமாரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.

போலீசார் தாக்கியதில் எனது இடது கண்ணில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் எனது இளைய மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இதுவரை விடுவிக்கவில்லை. தங்கராஜ் இருக்கும் இடத்தை கேட்டு அடித்து கொடுமைப் படுத்திவருகின்றனர். தங்கராஜ் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியாது என்று கூறினாலும், அதனை போலீசார் நம்பாமல், எனது அண்ணன் மகன் உட்பட அனைவரையும் விசாரணை என்ற பெயரில் கூட்டிச்சென்று அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.



இந்த பிரச்சனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்".  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...