கோவை வெஸ்டர்ன் கார்ட்ஸ் பள்ளியில் ‘உலக குருதி கொடையாளர் தினம்’ இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார்.
‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.

பள்ளிச் செயலாளர் சசிக்குமார் சாம்ராஜ் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ‘இந்திய மருத்துவ அமைப்பின்’(IMA) இரத்த வங்கியின் ஆலோசகர் டாக்டர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆகிலா பிர்தோஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் காணொலி மூலம் மாணக்கருக்கு இரத்த வகைகள், மனித இரத்தத்தின் முக்கியத்துவம், இரத்தம் கொடை அளிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து விளக்கிக் கூறினார்.
‘இரத்த தானம் செய்வோம்’ என்ற வாசகத்தை மாணக்கர் அமைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கோவையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்தம் நன்கொடை அளிக்க ஏதுவாக பள்ளி பெற்றோர்களின் இரத்த வகைகள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாணக்கர் தங்கள் பெற்றோர்களுக்கு இரத்த தானத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி இரத்த தானம் செய்ய வைப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆக்னஸ் பிரியா நன்றியுறை கூறினார்.