சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சிசயர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, பத்தாம் மற்றும் பன்ணிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்க்ளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து, குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பயின்று பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், சர்வதேச குழந்தைத் தொழில் முறை எதிர்ப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 12 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் குழந்தைத் தொழிலாளர் திருத்த சட்டம் 2016-ன் படி குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரை பணியில் அமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தை தொழில்முறை ஒழிப்பு திட்டம் இணைந்து செயல்பட்டு வருகின்றது.



14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. 18  வயதிற்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்ற மத்திய அரசின் சட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து பொதுமக்கள் கூடும் இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டம், தொழிலாளர் துறை,  தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம், கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், தொழில் வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, கடைகள், தொழிற்சாலைகள், பவுண்டரி, செங்கல் சூளைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த விதப் பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டோம் என்றும், 18 வயதிற்கு உட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் 30,000 உறுதிமொழி படிவங்கள் நிறுவன உரிமையாளர்களிடம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரிமா சங்கங்களுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிரை, கட்டுரை, ஒவியம், பேச்சுப் போட்டி மற்றும் ஸ்லோகன் எழுதும் போட்டிகள் பொள்ளாச்சி, கோவை, கோவை மாநகராட்சி அளிவல் நடத்தப்பட்டு பின்னர் ஜூன்- 27 ஆம் தேதி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவற்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.



தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம் குழந்தை தொழிலாளர்களற்ற மாவட்டமாக திகழ்கின்றது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சர்வதேச குழந்தை தொழில்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், இணை ஆணையர் (தொழிலாளர் நலன்) மாரிமுத்து, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...