மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழை மரங்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே வேளாண்நகர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையினை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாழைமரக் கன்றுகளுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மதுக்கடைக்கு அருகே தின்பண்டக்கடைகள் எதுவும் இல்லை. மது அருந்த வருவோர்க்கான இட வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அந்தக் கடையில் மது அருந்த வருவோர் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை விவசாய நிலத்திலேயே வீசிச் செல்கின்றனர். 

மேலும், மதுப்பிரியர்களால் அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.



இதேப்போன்று சுல்தான்பேட்டை ஒன்றியம், கள்ளம்பாளையம் ஊராட்சி செம்பாமக்குட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செம்பாமக்குட்டையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மது அருந்த வருவோர் அவ்வழியாக நடமாடும் பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கின்றனர். இந்தக் கடையின் அருகிலேயே பழைய விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் மக்களுக்கு மதுபிரியர்களார் இடையூறுகள் ஏற்படுகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்தக் கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

இதுகுறித்து மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடை கட்டிட உரிமையாளர் துரை (எ) பாலகிருஷ்ணன் கூறுகையில், இது எனது சொந்தக் கட்டிடம். இங்கு மதுபானக் கடை அமைக்க நான் அனுமதி வழங்கியுள்ளேன். எனது கட்டிடத்தில் இயங்கும் கடையினை இடமாற்றம் செய்ய முறையிட பிறருக்கு உரிமை இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

ஒண்டிபுதூர் பகுதி மக்கள் மனு:-

கோவை 61-வது வார்டுக்குட்பட்ட ஒண்டிபுதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதி பட்டணம் இட்டேரி சாலையில் அதிகளவிலான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில், புதிதாக இப்பகுதியில் டாஸ்மாக் கடை கடந்த ஜூன் 8-ம் தேதியன்று துவங்கப்பட்டது. இந்தக் கடையினால் பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

மேலும், தற்போது டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் இதுவரையில் 3 கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை கொலை செய்து சடலத்தை பூமியில் புதைத்துவிட்டனர். இதனை 10 நாட்களுக்கு பின்புதான் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் முதலே மக்கள் போராடி வருகிறோம்.

இப்பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என பொள்ளாச்சி டாஸ்மாக் மேலாளர் பாலாஜியும் எங்களிடம் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், தற்போது இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரண மேற்கொண்டு ஒண்டிபுதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...