அதிமுக பல அணிகலாக பிரிந்ததற்கு பாஜக காரணம் அல்ல என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல எனவும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

கோவை, திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இது வரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் வலிமையான பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது துரதிஷ்டவசமானது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை பெரிதாக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளே விவசாயம் புறக்கணிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பதற்கு பாஜக காரணமல்ல. ஜெயலலிதாவின் வாக்குறுதிகளையும், கனவுகளையும் நனவாக்க அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாட்டிறைச்சி தடை சட்டம் குறித்து தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஏதாவது ஒரு பிரச்சனையை வைத்து அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் வழக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தக்க நேரத்தில் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவே பாஜக விரும்புகிறது" என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

முதலில் திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெங்கையா நாயுடு மாலையில் கோவையில் நடைபெறும் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...