மின்சாரம் தாக்கி உயிரிழந்த அண்ணன், தங்கை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவை மாவட்டத்தில் கடந்த புதனன்று பரவலாக கன மழை பெய்தது. இதில, உக்கடம் பகுதியில் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் சல்மான் (18), பானுமா (16) ஆகிய அண்ணன், தங்கைகள் உயிரிழந்தனர்.

அவர்களது உடலை மீட்ட உக்கடம் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் உடலை வாங்க மறத்து அவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் கோவை வடக்கு வருவாய்த் துறை கோட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வடக்கு வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா 3 லட்சம் என 6 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...