மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் மறியல்

கார்பரேட் நிறுவனங்களுக்கு மொத்தமாக பர்மிட் வழங்கும் ஆர்டிஓ நிர்வாகத்தை கண்டித்தும், மீட்டர் கட்டணத்தை அமலாக்க வலியுறுத்தியும் கோவையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்பரேட் ஆட்டோக்கள் மற்றும் ஓலா, உபர் போன்ற வாகனங்களுக்கு எந்த வரைமுறையும் இல்லாமல் ஆர்டிஓ நிர்வாகம் பர்மிட்டுகளை வழங்கி வருவதாகவும், மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயிக்காத நிலையில் தாங்களாகவே நிர்ணயித்து கோவையில் இயக்கி வருவதாகவும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலை போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும், புதிய புதிய உத்தரவுளை பிறப்பித்து ஆட்டோ தொழிலாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் மத்திய அரசை கண்டித்தும்  கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் மணிக் கூண்டு அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எல்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவை மீறி எப்சி செய்யாத வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் வசூலிப்பதை நிறுத்தக் கோரியும், மீட்டர் கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட 97 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...