உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களை இணைப்பது என்பதை மையக்கருத்தாக கொண்டு இந்தாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி கோவை- அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரம் அறக்கட்டளை மற்றும் தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் மருத்துவ மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை நடும் பணிகளை மேற்கொள்வதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் மரங்களை நட வேண்டுமெனவும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்களும் இணைய வேண்டுமென்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...