நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த இரு நாட்களாக மேகம் மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. அவ்வப்போது சிறியதளவு மழையும் பொழிந்து வந்தது.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென பலத்த சூராவளிக்காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது.
இதனால், நீலகிரிக்கு உட்பட்ட குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகள் கடந்த சில மாதங்களாக இருந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மீண்டு குளிர்ந்து காணப்படுகிறது.
உதகையில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவது தென்கிழக்கு பருவமழை துவங்கியதற்கான அறிகுறிகள் என்றும், கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று குளிர்ந்த காற்று வீசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீலகிரி பகுதி குடியிருப்புவாசி அஹமத் தெரிவித்தார்.