கோவை மண்டல பேங்க் ஆப் இந்தியா சார்பில் ‘ஸ்டார் மஹொத்சவ்’ விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழிப்புணர்வு விழா நாடு முழுவதும் உள்ள 5200 வங்கி கிளைகளில் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நோக்கமே வங்கி வாடிக்கையாளர்களை அவர்களின் வீடு தேடிச் சென்று சந்திப்பதுதான்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாராக் கடன் வசூல், புதிய வீட்டு, வாகன கடன்கள் வழங்குதல், தொழில் மற்றும் விவசாய கடன் வழங்குதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் மெஷின்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு விழாவை ஆர்.என். புரம் கிளையில் மண்டல மேலாளர் தி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கிளை ஏ.ஜி.எம். டி.வி.ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வீடு, தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி அளிக்கப்பட்டது. இதைத் தவிர, சூலூர், காந்திபுரம், கோவை பிரதான கிளை ஆகியவற்றில் நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவிலும் ரவீந்திரன் பங்கேற்று, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், சுவர்ணபுரி கிளையில், நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவை துணை மண்டல மேலாளர் டி.டி.சீனிவாச ராவ் துவக்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த புரம் கிளை நடைபெற்ற விழாவை துணை மண்டல மேலாளர் கே.பாண்டியன் துவக்கி வைத்தார்.
கோவை மண்டலத்தில் நடைபெற்ற இவ்விழாவின் மூலமாக மொத்தமாக ரூ.46 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 கோடி மதிப்பிலான வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கிளை, துணை பொது மேலாளர், டி.வெங்கடேஷ்வர ராவ், கோவை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கௌரிசங்கர் ராவ் மற்றும் வி.எஸ்.சோமசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வாராக் கடன் வசூல், புதிய வீட்டு, வாகன கடன்கள் வழங்குதல், தொழில் மற்றும் விவசாய கடன் வழங்குதல், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், பிஓஎஸ் மெஷின்கள் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு விழாவை ஆர்.என். புரம் கிளையில் மண்டல மேலாளர் தி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். கிளை ஏ.ஜி.எம். டி.வி.ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வீடு, தொழில் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான கடனுதவி அளிக்கப்பட்டது. இதைத் தவிர, சூலூர், காந்திபுரம், கோவை பிரதான கிளை ஆகியவற்றில் நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவிலும் ரவீந்திரன் பங்கேற்று, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், சுவர்ணபுரி கிளையில், நடைபெற்ற ஸ்டார் மஹொத்சவ் விழாவை துணை மண்டல மேலாளர் டி.டி.சீனிவாச ராவ் துவக்கி வைத்தார். மதுரை ஜெய்ஹிந்த புரம் கிளை நடைபெற்ற விழாவை துணை மண்டல மேலாளர் கே.பாண்டியன் துவக்கி வைத்தார்.
கோவை மண்டலத்தில் நடைபெற்ற இவ்விழாவின் மூலமாக மொத்தமாக ரூ.46 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.3 கோடி மதிப்பிலான வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் கிளை, துணை பொது மேலாளர், டி.வெங்கடேஷ்வர ராவ், கோவை மண்டல அலுவலக துணை பொது மேலாளர் கௌரிசங்கர் ராவ் மற்றும் வி.எஸ்.சோமசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.