பாஜக-வின் மூன்றாண்டு ஆட்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கடந்த மூன்று ஆண்டுகால பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஓராண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்க்கப்படவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, சவுந்திரராஜன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநிலக் குழு கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டு கால பாஜக அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை. தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சட்டம் ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு விமர்சிப்பதில்லை. அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கின்றது.

இந்த மாநிலக் குழு கூட்டத்தில் இந்தி திணிப்பு, வறட்சி, மாட்டிறைச்சி போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு இல்லை. சென்னை ஐஐடி-யில் தாக்குதலுக்குள்ளான சூரஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது. தாக்கப்பட்ட சூரஜ் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் கையை முறிக்கும் காவல் துறை, கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றது" இவ்வாறு சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...