கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 67-வது வார்டுக்குட்பட்ட மருதூர், பெருமாள் கோவில் வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றி வருவதையும் தேவைற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பெருமாள் கோவில் வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதியில் செயல்பட்டு வரும் மளிகைக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான் குறைவாக உள்ளதா என மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி துணை ஆணையர் சோதனை செய்தார். இதில், 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி அலுலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ப.காந்திமதி ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பெருமாள் கோவில் வீதி மற்றும் மாரியம்மன் கோவில் வீதியில் செயல்பட்டு வரும் மளிகைக் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான் குறைவாக உள்ளதா என மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி துணை ஆணையர் சோதனை செய்தார். இதில், 50 மைக்ரான் குறைவாக இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய மாநகராட்சி அலுலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.