நீலகிரியில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 322 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் பள்ளி வாகனங்களின் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தற்போது உதகையில் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அவசர கால கதவுகள், படிகட்டுகள், இருக்கைகள் போன்றவை நல்ல நிலையில் உள்ளனவா என்றும் முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் நல்ல நிலையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது" என மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சே.லட்சுமிபதி ராஜ், உதகை வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...