அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.

குடியரசு தலைவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, அவினாசி- அத்திகடவு திட்டதிற்கான நிதி போன்ற மாவட்டங்களுக்கு தேவையான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகின்றது. 

நேற்று எம்.எல்.ஏ-க்கள் முதல்வரை சந்தித்து தொகுதி கோரிக்கைகளை தெரிவிக்கவே வந்தனர். எம்.ஏல்.ஏ கூட்டத்தை கூட்டச்சொன்னது குறித்து தனக்கு தெரியாது" என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தடம் புரள்வதாக ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு, இரண்டு அணியும் ஒன்றாக சேரவேண்டும் என்பதே தனது கருத்து' என்றார்.

மேலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதில் தவறில்லை என தெரிவித்தார். பத்திரிகையில் எதாவது செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் சொல்வதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல தேவையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...