ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்பதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

123-சட்டமன்ற உறுப்பினர்கள், 38 அமைச்சர்கள், 48 மாவட்டச் செயலாளர்கள், 98 சதவிகித தொண்டர்களின் பலம் தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதாவிற்கு மேலே உள்ளதாக சிலர் நினைத்துக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தரைமட்டத்தில் என்ன நிலவரம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என ஓ.பி.எஸ். அணிக்கு சூசகமாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பின் போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

ஓ.பி.எஸ், பொன்னையன், பி.எச்.பாண்டியன், முனிசாமி ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் என்னை பொருளாளராக நியமித்துள்ளார். சசிகலா பொதுச்செயலாளர் என்ற கடித்தத்தை பார்த்து வங்கி அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே தற்போது சட்டப்படி, முறைப்படி செயல்பட்டு வருகிறது. 

ஜெயலலிதாவால் 7 ஆண்டுகள் பொருளாளராக தான் இருந்தேன். முதலமைச்சராக இருக்கும்போது மகிழ்சியாக இருந்த ஓ.பி.எஸ்., சசிகலா முதலமைச்சராக வரலாம் என்று சொல்லும்போது விலகி விட்டார்.

தமிழக நிர்வாகம் குறித்த ரஜினிகாந்த்-தின் பேச்சிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தான் என்னுடைய கருத்தும். இணைப்பு வேண்டும் என்று சொல்லும் முதல் ஆளான நான் எதுவும் தவறாக பேசாத நிலையில், என்னை ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்டாலின் பகலில் படுத்துக்கொண்டு கனவு காண்கிறார். நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களையும், வன விலங்குகளையும் இரு கண்களாக பாவிக்கும் அரசு அதிமுக. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிகளவு வன விலங்குகள் உள்ளன. மனிதாபிமான அடிப்படையில் வன அலுவலர்கள் வன சூழலில் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...