விரைவில் சட்டமன்றம் கூட்டப்படும் என உதகையில் மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையில் 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய அவர்,மலைகளின் அரசியான நீலகிரிக்கு யாரும் மகுடம் சூட்டாத நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் மகுடம் சூட்டியதாகவும் பல்வேறு நல திட்டங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்தவர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டினார்.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது கொய்மலர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும்,ரோஜா தோட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் அவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.

தொடர்ந்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனன் மற்றும் கோபாலகிருஷ்னன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று உதகை பேருந்து நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்த உடனடியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை வழங்க இந்த அரசு தயாராக இருப்பதாக கூறிய முதலமைச்சர்,முன்னாள் முதல்வர் பாணியில் பிறரை அழிக்க நினைத்து அழிந்த பக்தன் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறியும் தன்னை யாரும் வளர்த்து விடவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே தான் வளர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது உதகை தாவரவியல் பூங்காவை சீரமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிகள் விரைவில் துவங்கும் எனவும் கூறினார்.இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியில் 2 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் விரைவில் தமிழக சட்டமன்றம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...