தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளர் பொறுப்பேற்பு

ஜே.பி.பாண்டே தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணைப் பொதுமேலாளராகவும், தலைமை கண்காணிப்பு அதிகாரியாகவும், இன்று பொறுப்பேற்றார். அவருக்கு முன்னர் முதுநிலை துணைப் பொதுமேலாளராக பொறுப்பில் இருந்த ஆர்.முகுந்தன் ரயில்வே பணியில் இருந்து பணி ஓய்வு பெற்றதால், பாண்டே அப்பொறுப்பில் ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாண்டே, கட்டுமானப் பொறியியலில் ரூர்கி ஐஐடியில் பி.டெக் பட்டமும், டெல்லி ஐஐடியில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார். 1985ம் ஆண்டு ரயில்வேயின் பொருட்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் தெற்கு ரயில்வேயில் பொறுப்பேற்கும் முன் மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் கோட்டத்தின் ரயில்வே கோட்ட மேலாளராக பணியாற்றி வந்தார்.

வடக்கு ரயில்வே மற்றும் வடமத்திய ரயில்வேயின் தலைமைப் பொருள்கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், வடமத்திய ரயில்வேயின் ஜான்சி கோட்டத்தில் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். 

மேலும் பாண்டே, 1998ம் ஆண்டில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலும், 2009-ம் ஆண்டில் சிங்கப்பூர் லீ குவான் யூ பொதுக் கோட்பாடு பல்கலைக் கழகத்திலும், 2015ம் ஆண்டு இத்தாலியில் உள்ள போக்கியோனி மேலாண்மைப் பல்கலைக் கழகத்திலும் சிறப்புப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...