எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, அதன் முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான விஜய கார்த்திகேயன் மற்றும் கந்தசாமிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரிய விவகாரத்தில், மத்திய அரசுக்கு தேவையான விளக்கங்களுடன் கடந்த ஜூலை 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜரான மத்திய அரசின் பணியாளர் துறை இணைச் செயலாளர் சுஷீல் குமார் பாட்டீலிடம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரி, வழக்கு தொடர்பாக அதிக அளவிலான ஆவணங்கள் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும், ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் கருத்து அடுத்த வாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விளக்கமளித்தார்.

அதன்பின்னர் ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றும், வழக்குத் தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திடம் இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடைமுறைகளை நிறைவு செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும், மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2025 நவம்பர் முதல் இதுவரை அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, அதன் முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...