கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வெள்ளக்கிணர் பகுதியில் கரைக்கப்பட்டன. வறட்சி காரணமாக இயற்கை குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் மூழ்கடிக்கப்பட்டன. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர்கள் நீரில் இறங்கி சிலைகளை பெற்று கரைத்தனர். நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மூன்றாம் நாளான இன்று வெள்ளக்கிணர் பகுதியில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் கரைக்கப்பட்டன.

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிசத், அகில பாரத இந்து மஹா சபா, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சிவ சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தன.



மூன்றாம் நாளான இன்று அவ்வாறு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து வெள்ளக்கிணர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. வறட்சி காரணமாக அப்பகுதி குட்டையில் நீர் இல்லாததால், மாநகராட்சி சார்பில் 20 அடி ஆழத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட குட்டையில் நீர் நிரப்பப்பட்டு, அதில் சிலைகள் கரைக்கப்பட்டன.



குட்டையில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை ஊழியர்கள் தண்ணீரில் இறங்கி விநாயகர் சிலைகளைப் பெற்று நீரில் மூழ்க வைத்து கரைத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்கும் நிகழ்ச்சியை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...