பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில், கடலூர் வடலூரை சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம் (குண்டர் சட்டம்) பாய்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் உத்தரவின் பேரில் செப்டம்பர் 14, 2026 அன்று தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, கோயமுத்தூர் மத்திய சிறையில் இருந்து வரும் கணேசமூர்த்திக்கு அது சார்பு செய்யப்பட்டது. இதற்கு முன் ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


Coimbatore: மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திய வழக்கில், கடலூர் வடலூரை சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம் (குண்டர் சட்டம்) பாய்ந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் உத்தரவின் பேரில் செப்டம்பர் 14, 2026 அன்று தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது கோயமுத்தூர் மத்திய சிறையில் காவலில் இருக்கும் கணேசமூர்த்திக்கு அது சார்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ரூபேஷ்குமார் மீனா உத்திரவின் பேரிலும், அத்துறை கனம் காவல் கண்காணிப்பாளர் R.சீனிவாச பெருமாள் மதுரை மண்டலம் (பொறுப்பு) கோயம்புத்தூர் மண்டலம் அவர்களது அறிவுரைப்படியும், கோயம்புத்தூர் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் S.மரியமுத்து அவர்களது மேற்பார்வையிலும் ஆகஸ்ட் 28, 2026 அன்று காலை 6.30 மணிக்கு கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில் இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. வேளாண்மை அலுவலர் நாக சுப்பிரமணியம் தன் குழுவினருடன் கோவை to பாலக்காடு ரோட்டில் மதுக்கரை RTO சோதனைச்சாவடி அருகே வாகனத்தணிக்கை மேற்கொண்ட போது, TN 32 AH 9612 பதிவெண் கொண்ட Ashok Leyland Tarrus லாரியில் சுமார் 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்திச்செல்லப்படுவது கண்டறியப்பட்டது.

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் அவரது தம்பி செந்தில்குமரன் நடத்தி வரும் பாரத் யூரியா உர கடையிலிருந்து இந்த மூட்டைகள், கடலூர் to விருத்தாசலம் மெயின் ரோட்டில் விருத்தாசலம் டோல்கேட் அருகே லோடு ஏற்றப்பட்டு கடத்தப்பட்டது. கடலூர் பண்ரூட்டி மாளிகை மேடு பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் மணிகண்டன் மற்றும் கடலூர் லட்சுமி நாராயணபுரம் NGK நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூங்காவனம் ஆகியோர் ஓட்டுநர்களாக இருந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த பாரத் யூரியா உர புரோக்கர் தனபால் மூலமாக, கேரளா மாநிலம் எர்ணாகுளம் அல்லப்பாராவை சேர்ந்த முகமது பாசில் என்பவரின் உதவியுடன், Perumbavur, Plywood Manufactures Consortium Pvt Ltd, Sidco Industrial Park, Angamali, Kerala நிறுவனத்தின் மேனேஜர் பெயின் மூலமாக இந்த உரம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பொள்ளாச்சி CSCID அலகில் எண்.283/2026 என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. எதிரிகளான மணிகண்டன் மற்றும் பூங்காவனம் ஆகியோர் ஆகஸ்ட் 28, 2026 அன்றும், உர வியாபாரிகளான கணேசமூர்த்தி, அவரது தம்பி செந்தில்குமரன் மற்றும் முகமது பாசில் ஆகியோர் ஆகஸ்ட் 29, 2026 அன்றும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணேசமூர்த்தி தொடர்ந்து மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள Perumbavur, Plywood Manufactures Consortium Pvt Ltd, Sidco Industrial Park, Angamali, Kerala நிறுவனத்திற்கு விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்ததாகவும், இதன் மூலம் அரசின் திட்டத்தை பாழ்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் L.முரளிதரன் அவர்களது பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார், கணேசமூர்த்தி மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.

மேலும், மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...