கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை டாடா பாத் பகுதியில் உள்ள மெட்ரோ மின் பகிர்மான வட்டத்தில் பணியாற்றும் மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி அவர்களின் புகாரின் பேரில், அரசு முத்திரைகளை போலி செய்து மின்வாரியத்தில் வேலை தருவதாக மோசடி செய்த மர்ம நபர்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை டாடா பாத் பகுதியில் உள்ள மெட்ரோ மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளராக சாந்தநாயகி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவரது அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, மர்ம நபர்கள் சிலர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் மற்றும் மின்வாரியத் துறை முத்திரைகளை போலியாகத் தயாரித்துப் பயன்படுத்தி பொதுமக்களிடம் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக அப்பாவி நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்டு, துறைக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் மர்ம கும்பல் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. போலியான அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளைப் பயன்படுத்தி மக்களை நம்பவைத்த இந்த கும்பல், பல பேரிடமிருந்து பணம் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் Sub-Inspector தினேஷ்குமார் அரசு ஆவணங்களை போலியாகத் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பலை தீவிரமாகத் தேடி வருகிறார்.

இந்த மோசடியில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த இந்த மோசடி கும்பலை விரைவில் கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...