வால்பாறை பகுதியில் கன மழை பெய்துவருவதால் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நிலவிவரும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் பெரிதும் பாதிக்கப்படுவது சமவெளிப் பகுதியைச் சார்ந்தவர்களே. 

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் சமவெளிப்பகுதிகளில் சில மாதங்களாக மழை பொய்த்துப்போய் இருந்ததாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைபிரதேச பகுதிகளில் பெய்யும் மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வந்ததால் வால்பாறையில் உள்ள அனைத்து ஆறுகளும் வறண்டு காணப்பட்டன. வறட்சியின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வால்பாறையில் குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை முதல் வால்பாறைக்குட்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வால்பாறை சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் மட்டுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள சோலையாறு, சின்னக்கல்லார், நீரார் உள்ளிட்ட அணைகள் மீண்டும் தனது பழைய நிலைமைக்கு திரும்பும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...